Sunday, September 23, 2007

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


சிதறி விழுந்ததானியக்குவியல்களாய்

என் மேல் சில மழை துளிகள்....


இத்தனை நொடிகளாய்

எங்கே நீங்கள்......


அணைத்தும் அணையாமலும்தழுவியது

மென்காற்று சிறகை போன்று........


இந்த தழுவல்

இதுவரை எங்கே........


தாயின் முகம் பார்த்து

புன்னகைத்ததுகுழந்தை.....


இந்த புன்னகை

இந் நாள்வரை எங்கே...........


சொற்குவியல்களாய்

கவிதைகள் மனதில்ஊற்றெடுக்க.........


இந்த சொற்கள் எங்கே

இது நாள் வரை.


உன்னை பார்த்ததும்


இதயத்தில் சில பனித்துளிகள்........

மனத்தில் சில மழைத்துளிகள்..


இத்தனை நாளாய்

எங்கிருந்தாய்


எனக்காகஇந்த உலகத்தில்.

No comments: