அழகாய் ஒரு உலகம்
அருகம்புல்லில்அழகாய் சில பனித்துளிகள்அதிகாலையில்....................
சிலிர்ப்பாய் என்மேல் சிலகாலை நேரத்து சாரல்கள்..........
படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்என் வழியில்.......
வழிமறித்து நின்ற என்னைவருடியே சென்றன சிறகடிப்போடு..........
வானத்தில் சில நிறக்கோடுகள்வானவில் ஜாலங்கள்எங்கும் வண்ணம் நிரம்பி........
பூக்கள் சிலஎன்னை நோக்கிமணத்தோடு நகைத்தன......
வண்டுகள் சிலகாதில் இசைத்தன........
மூங்கில் காடுகள்காற்றில் கீதம் இசைத்தன........
மரங்கள் பசுமையாய்அருகேஅழைத்தன......
காற்றின் இதமான வருடலோடுமனம் இரம்மியமானது.......
அழகாய் தான் இருக்கிறது உலகம்
மனம் எங்கும்ரசனையை தூவி
விழி விரித்து
இதயம் திறந்துபார்க்கும் போதெல்லாம்...............
No comments:
Post a Comment