Saturday, September 22, 2007

தேவதை பெண்கள்


வண்ணத்து பூச்சிகள்சில என்னை கடந்து சென்றன......

சிறிதே உற்று பார்த்த பின்கைகளும் கால்களும்அவற்றிற்கு.........


நிலாக்கள் சில ஒளி வீசி சென்றன

பார்த்த பின்னோமுகம் காட்டி நகைத்தன.........


ரோஜாக்கள் பலமனம் வீசி சென்றன.....

அருகே சென்ற பின்விழி விரித்து நகைத்தன..........


ஏனோ உவமைகள் போதவில்லை....

இத்தேவதை பெண்களைஅழகுபடுத்த........


வேறோர் உலகம்இங்கே உங்களால்எங்களுக்கு.....

உணர்வுகளின் சிலிர்ப்புகள் சில

உங்கள் நகைத்தலால்,நடத்தலால்.


கனல்களை வீசி விட்டு

ஏனோகரிசனமே காட்டாமல்

உங்கள் நடைகள்........


கொள்ளையடிப்பது தவறென்றால்.......

இதயத்தில் மட்டும்என்ன மாறுபாடுகள்........????

எங்கள் தேவதை பெண்களே!!!!!!!!!!!!


இர.குமார்.

No comments: